பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
61

உயிர்களின் இயல்பு; ஆசை இல்லை என்றால் செயல் இல்லை; உலகத்தின் எல்லாச் செயல்களுக்கும் அவற்றைச் செய்ய வேண்டும் என்ற விருப்பமே துண்டுதல் ஆகும். மேலும் மேலும் தளைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்றால் ஆசைகளைக் குறைத்துக்கொள்வது தான் வழி.

ஒருசிலர் ஆசைகளை நிறைய வளர்த்துக்கொள்கின்றனர்; பேயாக அலைகின்றனர்; அவர்களுக்கு உறங்குவதற்கும் நேரம் இருப்பது இல்லை. பொருள் தேவைதான்; எல்லாம் நமக்கே வேண்டும் என்று அலைந்தால் மன அமைதி கெடுகிறது; இன்பம் விடுபடுகிறது.

பந்தங்களை வளர்த்துக் கொள்வதால் கட்டுகள் ஏற்பட்டுவிடுகின்றன. அதனால் மற்றவர்கள் துன்பமும் நம்மைத் தாக்கிக்கொண்டு இருக்கின்றன. ஓய்வே இல்லை; உளைச்சல்தான் மிகுதி, நம்மால் சுமக்க முடியாத பொறுப்புகளை நாம் தலையில் இட்டுக்கொள்கின்றோம். மற்றவர்களுக்கும் பங்கிட்டுத் தந்தால் நாம் சற்று ஓய்வு பெறலாம்; நல்ல சிந்தனைகளில் காலம் கழிக்கலாம்.

மறுப்பு என்பது உறுதிபடைத்த நெஞ்சு உடையவர்க்கே இயலும். பதவிகளும், இன்ப சுகங்களும் தேடித் தேடி அலுத்துவிடுவோர் பலர். ஆசைகள் நம்மை அடிமை கொள்கின்றன. அவற்றிலிருந்து விடுதலை பெறுவதே இன்பத்துக்கு வழி; ‘வேண்டாமை’ என்று மறுக்கும் மன உறுதி மேலான செல்வமாகும். அதற்கு நிகரான செல்வம் வேறு இருக்காது.

மனம் அழுக்குப் பெறுவது ஆசைபற்றி அவதிகளுக்கு உள்ளாவதால்தான். மனம் துயநிலை பெற்றால் பாதிப்புகள் குறைந்துவிடுகின்றன. பொய்ப்பொருளை நிஜம் என்று