பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 திருக்குறள் சொற்பொருள் சுரபி

அவற்றை மறுத்து, மதச் சார்பற்ற தமிழர் நெறிகட்குத் தனித்துவம் தந்துள்ளார் என்று! நீங்கள் தான் அதற்கு கட்ட வேண்டும் நியாய வரம்பு!

மதநூல் என்றால் அதிலே மாயம் இருக்கும் அற்புதம் கூத்தாடும்: அறிவு நம்பாத ஆச்சரியங்கள் இருக்கும்! விஞ்ஞான வளர்ச்சிகள் அதைக் கண்டு விலா நோகச் சிரிக்கும் திருக்குறள் அத்தகைய ஒரு நூலல்லவே!

மதமே கூடாது என்பவனும், மதமே தேவை என்பவனும் திருவள்ளுவன் அல்லன். இவன் இரண்டுக்கும் இடையே, மலைக்கு நடுவே ஓடுகின்ற அருவி.

பொதுவாகப் பார்ப்பவன் மனிதனானான். குறிப்பாகப் பார்ப்பவன் மதவாதியானான்!

'செரிக்காத ஆசைகளை வைத்திருந்தவன் சொர்க்கத்தை நாடுவது வாடிக்கை என்றான் - கார்ல் மார்க்சு!

தேவையான ஆசைகளைப் பூர்த்திச் செய்து கொள்பவன் திராணியுள்ள மனிதன் என்றான் - ஏஞ்சல்சு. ஆனால், அய்யன் திருவள்ளுவர், மனக் கலவரத்திலே ஈடுபட்டுத் தன்னைத் தாக்குப் பிடிக்காதவர்களுக்கே திருக்குறள் செய்தார்.

மனம், என்ன என்பதை விளக்குவதற்குப் பதில், திருவள்ளுவர், அதிலிருந்து தப்பிப்பதற்குரிய வழிகளைச் சொன்னார். மனத்தின் கண் மாசிலனாதல் என்ற நிலையை உருவாக்க நினைத்தார்!

மனம் என்றால் என்ன என்பதைக் கூறிய பிரான்சு நாட்டுத் தத்துவவாதிகளான ஆல்பிரைட் கேமு-வைவிட, ஜீன்பால் சாத்தேயைவிட, தப்பிக்க முடியா மனத்திலிருந்து தப்பிக்க வழி கூறிய ஒரே ஒரு உலகத் தத்துவ ஞானி திருவள்ளுவரே!

வெறும் டைலக்டிகல் அனாலிசஸ் என்று சொல்வார்களே, அதைத் திருவள்ளுவர் செய்யவில்லை.

அப்படிச் செய்திருந்தால், அவர் பாமர மக்களிடையே வந்து சேர்ந்திருக்க மாட்டார் - படித்தவர்களிடையே சென்று சேர்ந்திருப்பார்,

மனம் உள்ளவரை மாச்சர்யங்கள் உண்டு. அதன் அடிப்படையில் ஒழுக்கங்களை கற்பிப்பது இமாலயப் பிரச்சனை.

'நீங்கள் வெறுமனே இருங்கள் ("Be in nothingness) என்று கூறுவதற்குப் ஃபிரெஞ்சு நாடு காத்திருக்கிறது.

ஆனால், எண்ணங்கள் உள்ளவரைதான் மனிதன் என்ற தத்து வத்தை 1972-ஆம் ஆண்டுக்கு முன்பே சிந்தித்துவிட்டான் திருவள்ளுவன். இவனுக்கு வால் நட்சத்திரம் முளைக்கவில்லை - மாட்டுக் கொட்டகை ஏதும் இல்லை. என்ன இருந்தாலும், நம் நாட்டவர்கள் ஒரு மனிதனை தெய்வமாக்குவது இல்லை. அறிவிலே நுட்ப ஞானத்தைப் பாராட்டினர். அதற்கு வைதீகன் ஆன்மீக சாயம் பூசிவிட்டான் அவ்வளவுதான்.