பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடமை

வள்ளுவர் கூட்டுடமை

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் இல்வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல் (குறள்:44) பொருளீட்டும்போது தீவினைக்கு அஞ்சி நல்வழியில் ஈட்டியும், பிறருக்குதவாவிடின் ஈயாத புல்லன் கன்னெஞ்சன் தன்னலக்காரன் மக்கட்டன்மை யில்லாதவன் என்று பலவாறு பிறர் தன்னைப் பழித்தற் கஞ்சியும், தன் பொருளை அஃதில்லாத பலரொடும் பகிர்ந்துண்னும் இயல்புடைய இல்வாணனது குடிவழி, எதிர்காலமெல்லாம் தொடர்ந்தியங்கும்.

பாத்துண் மரீஇ யவனைப் பசியென்னும் தீப்பிணி தீண்டல் அரிது (குறள் 227)

எப்போதுந் தன்பொருளைப் பலரொடு பகிர்ந்துண்டலை இயல்பாகக் கொண்டவனை, பசியென்னும் கொடிய நோய் ஒருபோதுந் தாக்காது.

இறைக்க ஆறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம் (பழ)

பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் நூலோர்

தொகுத்தவற்று ளெல்லாம் தலை. (பழ 322)

ஒருவன் தன்பொருளை அல்லது உணவைப் பலரொடும் பகிர்ந்துண்டு பலவகை யுயிர்களையும் பாதுகாத்தல், அறநூலார் இரு வகையறத்தார்க்குந் தொகுத்த அறங்களெல்லாவற்றுள்ளும் தலையாயதாம்.

பொருள் ஒருவர் துறக்குமுன் கொண்டிருந்ததாகவோ, துறந்தபின் பெற்ற நன்கொடையாகவோ இருக்கலாம். இனி, மடத்துச் செல்வம் போன்று ஒருவர் ஆட்சிக்குட்பட்டதாகவுமிருக்கலாம்.

துறவறவியலிற் கூறப்பட்டுள்ள அறங்களுட் சில இல்லறத்தார்க்கும் பொதுவென்பதை, கள்ளாமை, வாய்மை, வெகுளாமை, இன்னாசெய்யாமை என்னும் அதிகாரங்கள் தெரிவிக்கும். ஒரறம் ஈரறத்திற்கும் பொதுவாயினும், இல்லறத்தில் எளியதாகவும் செயல் பற்றியதாகவும், துறவறத்தில் அரியதாகவும் கருத்துப்பற்றியதாகவும் இருக்கும் எ-டு; களவு செய்யாமை இல்லறம், களவு செய்யக் கருதாமை துறவறம்.