பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை இன்பம் பொழுதுகண்டு இரங்கல் பொழுதே! நீ மாலைக்காலமா? இல்லை; - கூடிப்பிரிந்தார் உயிர்குடிக்கும் கூரியவேல், 1221 மயங்கும் மாலையே! நீயும் வருந்துகின்றாய்; என் காதலன்போல் நின்காதலனும்கொடியனா? 1222 நடுங்கி வருந்தும் மாலை வெறுப்பு ஊட்டிப் பிரிவுத் துன்பம் பெருகுமாறு வருகின்றது. 1223 காதலர் இல்லாதபோது மாலைக் காலம் கொலைக்களத்துக்குப் பகைவர்போல் வரும். 1224 காலைப் பொழுதுக்கு நான் செய்த நலம் என்ன? மாலைப் பொழுதுக்கு நான் செய்த தீமை என்ன?1225 மாலைக்காலம் நோய் செய்யும் என்பது காதல்ர் பிரியாதபோது எனக்குத் தெரியாது. 1226 காமம் என்னும் பூ, காலையில் அரும்பும்: பகலெல்லாம் மொட்டாகும்; மாலையில் மலரும். 1221 புல்லாங்குழல் என்னைக் கொல்லும் படையாகும்; தீப்போன்ற மாலைக்குத் தூதும் ஆகும். 1228 திங்களோடு மாலைக்காலம் வரும்போது ஊரே மயங்கி வருந்தும், 1229 பொருள் மயக்கம் உடையவரை நினைந்து பொறுத்த என்னுயிர் இம்மாலையில் போகும், 1230 250 அதிகாரம் 123 பொழுதுகண்டு இரங்கல் மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும் கற்பியல் வேலைநீ வாழி பொழுது. 1221 புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல் வன்கண்ண தோநின் துணை. 1222 பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித் துன்பம் வளர வரும். 1223 காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து - ஏதிலர் போல வரும். 1224 காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான் மாலைக்குச் செய்த பகை. 1225 மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத காலை அறிந்தது இலேன். 1226 காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலரும்இந் நோய். - 1227 அழல்போலும் மாலைக்குத் துதாகி ஆயன் குழ்ல்போலும் கொல்லும் படை 1228 பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு மால்ை படர்தரும் போழ்து. 1229 பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை மாயும்என் மாயா உயிர். 邯230 251