பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை அறம் அடக்கமுடைமை அடக்கம் வீரருள் ஒருவனாக்கும்; அடங்காமை பேதைக் கூட்டத்தில் சேர்க்கும். 12 i அடக்கத்தை ஒரு குறிக்கோளாகப் போற்றுக; உயிர்க்கு அதனினும் முன்னேற்றம் இல்லை. 122 அறிவன அறிந்து முறையோடு அடங்கின் அதனை உலகம் தெரிந்து சிறப்பிக்கும். 123 தரத்திலே குறையாது அடங்கியவன் தோற்றம் மலையினும் பார்வைக்குச் சிறந்தது. 124 எல்லார்க்கும் பணிவுடைமை வேண்டும்; அது செல்வர்க்கு இருப்பது இன்னும் செல்வமாம். 12.5 ஒருபிறப்பில் ஆமைபோல் ஐம்பொறியும் அடக்கின் எழு பிறப்பிலும் சேமம் உண்டு. 1 2 5 எவற்றை அடக்காவிடினும் நாவை அடக்குக: * அடக்காவிடின் சொற்குற்றப்பட்டு வருந்துவாய், 127 ஒரு சொல்லிலேனும் தீமை நேருமாயின் எல்லா நன்மையும் கெடுதலாகி விடும். 128 நீச்சுட்ட புண்ணோ உள்ளே ஆறிப்போம்; ஈடுசொல்லோ வடுவாகி என்றும் ஆறாது. 129 உள்ளக் கொதிப்பை அடக்கிய வல்லவனைக் காண்பதற்கு அறம் காத்துக் கிடக்கும். 13 () 26 இல்லறவியல் அதிகாரம் 13 அடக்கமுடைமை அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும். 121 காக்க பொருள அடக்கத்தை ஆக்கம் அதனினுஉங் கில்லை உயிர்க்கு. 122 செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து ஆற்றின் அடங்கப் பெறின். 123 நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாண்ப் பெரிது. 124 எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வந் தகைத்து. 125 ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து. 126 யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. 邯27 ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின் நன்றாக தாகி விடும். 128 தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு. 129 கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செல்வி அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து. 130 27