பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை புகழ் வறியார்க்கு ஈக: புகழோடு வாழ்க; அதுவே உயிர்க்குச் சிறந்த ஊதியம். உலகில் பாராட்டுவார் பாராட்டுவன எல்லாம் வறியவர்க்கு ஈந்த வள்ளல்களின் புகழ்களே. நிலையாத உலகத்து உயர்ந்த புகழ் தவிர எதுவும் அழியாது நிலைப்பதில்லை. உலகில் நெடும்புகழ் ஈட்டிய மக்களையே வானுலகம் போற்றும் தேவரைப் போற்றாது. புகழின் பொருட்டு அழிதலும் சாதலும் அறிவுடையவர்க்கே இயலும். அவைக்கண் புகழ் நோக்கொடு தோன்றுக: அந்நோக்கம் இலாதார் தோன்றாமை நல்லது. புகழில்லார் தம்மேல் வருத்தப்படாது தம்மை இகழ்வார்மேல் வருத்தப்படுவது ஏன்? பின்நிலைக்கும் புகழை ஒருவன் பெறாவிடின் அவன்பிறப்பு உலகிற்கே ஒரு பழி. புகழில்லா உடம்பைச் சுமப்பின் நல்ல நிலங்கூட வளங் குறையும். வசையின்றி வாழ்பவரே வாழ்பவர்; இசையின்றி இருப்பவரே இறந்தவர். 48 அறம் 23 1. 232 233 234 235 236 237 238 239 240 இல்லறவியல் அதிகாரம் 24 புகழ் ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு. 231 உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று ஈவார்மேல் நிற்கும் புகழ். 232 ಡ್ಗಿಲ್ಲ! உலகத்து உயர்ந்த புகழல்லால் பான்றாது நிற்பதொன்று இல், 233 நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப் போற்றாது புத்தேள் உலகு. 234 நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும் வித்தகர்க் கல்லால் அரிது. 235 தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று. 236 கழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை ੇ நோவது எவன். 237 வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும் எச்சம் பெறாஅ விடின். 238 வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா யாக்கை பொறுத்த நிலம். 239 வசைஒழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய வாழ்வாரே வாழ்ா தவர். 240 49