பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை நிலையாமை நிலையாத பொருள்களை நிலைக்கும் என்று கருதும் அறிவு மிகவும் கடையானது. பெருஞ் செல்வம் வந்துபோவது நாடகத்துக்கு மக்கள் வருவது போவது போன்றது. செல்வம் நிலைப்படாதது; அது கிடைத்தால் நிலைத்தவற்றை உடனே செய்து கொள்க. காலம் உயிரறுக்கும் வாள்: நாளன்று: உணர்வார்க்கு உண்மை விளங்கும். நாச்சுருண்டு விக்கல் வருமுன்னே அறத்தைத் தானே முற்பட்டுச் செய்க. நேற்று இருந்தான் இன்று இறந்தான் என்பதே இவ்வுலகத்தின் பேரியல்பு. மறுகணம் இருப்பதை அறிய மாட்டாதவர் கட்டுகின்ற கோட்டைகள் எவ்வளவோ கோடி. உடம்புக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பு கூடுவிட்டுப் பறவை ஓடுவது போன்றது. தூங்குவது போன்றது சாவு தூங்கி விழிப்பது போன்றது பிறப்பு. w உடலில் ஒட்டுக் குடியிருக்கும் உயிர்க்கு நிலையான ஒரு வீடு கிடைக்க வில்லையோ? 68 அறம் 33 1 332 333 3.34. 335 336 337 338 339 3唯{} துறவறவியல் அதிகாரம் 34 நிலையாமை நில்லாத வற்றை நிலையின என்றுணரும் புல்லறி வாண்மை கடை 331 கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந் தற்று. 332 அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால் அற்குப ஆங்கே செயல். 333 நாளென ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும் வாளது உணர்வார்ப் பெறின். 334 நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யப் படும். 335 நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்துஇவ் வுலகு. 336 ಲ್ಗಳ್ಗನ್ತಿ। வாழ்வது அறியார் கருதுப காடியும் அல்ல பல. 337 குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே உடம்போடு உயிரிடை நட்பு. உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு. S39 புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு. 340 69