பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை துறவு எந்தெந்தப் பொருளைத் துறந்தோமோ அந்தந்தப் பொருளால் துன்பம் இல்லை. பொருள் உள்ளபோதே துறக்க: துறந்தால் இப்பிறப்பில் வரும் நலன்கள் பல. ஐம்புல உணர்ச்சிகளை அடக்க வேண்டும்; எல்லாத் தேவையையும் விடுக்க வேண்டும். யாதும் இல்லாமையே தவத்தின் இயல்பு: ஏதும் இருப்பது ஆசையாகி விடும். பிறப்பற முயல்வார்க்கு உடலும் கூடாதெனின் பிறதொடர்பு பற்றி என்ன சொல்வது? யான் எனது என்னும் கருவமற்றவன் தேவர்க்கும் எட்டா உயர்நிலையை அடைவான், பற்றுக்களை விடாது பிடித்துக் கொள்பவரைத் துன்பங்களும் விடாது பிடித்துக் கொள்ளும். முற்றத் துறந்தவரே வீடடைவார்; அங்ங்னம் துறவாதவர் பிறப்புவலையில் மயங்கி வீழ்வார். பற்று விட்டபோதுதான் பிறப்பு விடும்; விடாதபோது இறப்பும் பிறப்பும் வரும். பற்றில்லாத இறைவனைப் பிடித்துக் கொள்க: அப்பிடிப்பே உலகப்பற்றை விடுதற்கு வழி. 70 அறம் 341 342. 343 344 345 346 34? 3.48 3.49 350 துறவறவியல் அதிகாரம் 35 துறவு யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன். 341 வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின் ஈண்டுஇயற் பால பல. 342 அடல்வேண்டும ஐந்தன் புலத்தை விடல்வேண்டும் வேண்டிய எல்லாம் ஒருங்கு. &43 இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை மயலாகும் மற்றும் பெயர்த்து. 344 மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை. - 345 யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும். 346 பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப் பற்றி விடாஅ தவர்க்கு. - S47 தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி வலைப்பட்டார் மற்றை யவர். 348 பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று நிலையாமை காணப் படும். 349 பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு. 350 71