பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை தெரிந்து செயல்வகை அழிவதும் ஆவதும் பின் வரும் ஊதியமும் எல்லாவற்றையும் எண்ணிச் செய்க. சேர்ந்தவர்களைக் கலந்து செய்பவர்க்குச் செய்ய இயலாதது ஒன்றுமே இல்லை. வருவதை நம்பி உள்ளதை இழக்கும் காரியத்தில் ஈடுபடார் அறிவு இருப்பவர். வெட்க உணர்ச்சிக்கு அஞ்சுகின்றவர் விளங்காத காரியத்தை மேற்கொள்ளார். உட்கூறுகள் தெரியாது செய்யப் புறப்படுதல் பகைவர் வெற்றிக்குப் பாத்தி பிடிப்பதாகும். செய்ய வேண்டாதன செய்தாற் கெடுவான்; வேண்டியன செய்யாவிட்டாலும் கெடுவான். நன்றாக நினைத்துக் காரியத்தில் இறங்குக: இறங்கியபின் பார்க்கலாம் என்பது தவறு. முறைப்படி உழையாத உழைப்பு பலர்துணை இருப்பினும் ஒட்டைபடும். அவரவர் இயல்பு அறிந்து செய்யாவிடின் நன்மை செய்வதும் தவறாகி விடும். உன் நிலைக்கு ஏற்காததை உலகம் ஏற்காது: உலகம் இகழாதவற்றை எண்ணிச் செய்க. 96 பொருள் 461 462 463 464 465 466 铁67 468 469 470 அதிகாரம் 47 தெரிந்து செயல்வகை அழிவது-ம் ஆவது உம் ஆகி வழிபயக்கும் அரசியல் ஊதியமும் சூழ்ந்து செயல். 461 தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு அரும்பொருள் யாதொன்றும் இல், 462 ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை உள்க்கார் அறிவுடை யார். 463 தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும் ஏதப்பாடு அஞ்சு பவர். 464 வகையறச் சூழா தெழுதல் பகைவரைப் பாத்திப் படுப்பதோ ராறு. 465 செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானும் கெடும். * 466 எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு. 467 ற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று ಘೆತ್ಲಿ பொத்துப் படும். 468 நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை 469 எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மொடு கொள்ளாத கொள்ளாது உலகு. 470 97