பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை பொருள் காலம் அறிதல் காக்கை கோட்டானைப் பகலில் வென்றுவிடும்; வேந்தர் வெல்லும் காலம் பார்க்க வேண்டும். 481 காலம்பார்த்து ஏற்ப நடப்பது நிலையாகச் செல்வத்தைக் கட்டும் கயிறாகும். 482 ஆற்றலோடு காலமும் அறிந்து செய்யின் செய்தற்கு அரியதென ஏதும் உண்டோ? 483 காலமும் இடமும் கணித்துச் செய்யின் உலகமே வேண்டினும் கிடைக்கும். 484 ஞாலம் முழுதும் ஆளக் கருதுபவர் காலம் பார்த்துக் கலங்காது இருப்பர். 485 ஊக்கம் உடையவன் ஒடுங்கி இருப்பது சண்டைக்கடா பின்வாங்கும் குறிப்பாகும். 4.86 அறிவுடையார் வெளிப்படக் கொதிப்படையார்: காலம் பார்த்து உட்கொதிப்பு அடைவர். 487 பகைவரைக் காணும்போது பணிக; காலம் வந்தபோது அவர் கவிழ்வர். 488 கிடைத்தற்கு அரியது கிடைத்தால் உடனே செய்தற்கு அரியதைச் செய்து கொள்க. 489 ஒடுங்கிய காலத்துக் கொக்குப் போல்க: சிறந்த காலத்து அதன் குத்துப் போல்க. 490 1 00 அரசியல் அதிகாரம் 49 காலம் அறிதல் பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது. 481 புருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத் - தீராமை ஆர்க்கும் கயிறு. 482 அருவினை என்ப உளவோ கருவியான் காலம் அறிந்து செயின். 483 ஞாலம் கருதினுங் கைகூடும் காலம் கருதி இடத்தாற் செயின். 484 காலம் கருதி இருப்பர் கலங்காது . - ஞாலம் கருது பவர். 485 ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேருந் தகைத்து. 486 பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து உள்வேர்ப்பர் ஒள்ளி யவர். 487 செறுநரைக் காணின் சுமக்க இறுவரை காணின் கிழக்காம் தலை. 488 எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே செய்தற் கரிய செயல். 489 கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து. 490 1 O1