பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை பொருள் பேதைமை பேதைமை என்ற நிலையின் இயல்பு யாது? தீமையைக் கொண்டு நன்மையை விடுதல். 831 அறியாமையுள் எல்லாம் பெரிய அறியாமை வேண்டாத பொருள்மேல் விருப்பம் கொள்வது. 832 வெட்கமின்மை நாட்டமின்மை உறுதியின்மை பேணுதலின்மை பேதையின் இயல்புகள். 8.33 கற்றும் உணர்ந்தும் கற்பித்தும் தான்மட்டும் அடங்காத அறிவிலிபோல் அறிவிலி இல்லை. 834 எழுபிறப்பிலும் தான் தங்கும் நரகத்தினை ஒரு பிறப்பிலேயே பேதை தேடிக் கொள்வான். 835 செயலறியாத பேதை செய்யப் புகுந்தால் பொய்சொல்வான். கைவிலங்கும் கொள்வான். 886 பேதை உரிமையால் பெருஞ்செல்வம் பெற்றால் அயலவர் கொழுப்பர் உறவினர் வாடுவர். 837 அறிவிலிக்குப் பொருளும் கிடைக்குமாயின் பைத்தியம் கட்குடித்த நிலை போலாகும். 838 பேதையின் உறவு பெரிதும் இனியது: பிரியுங்கால் யாதும் வருத்தம் இல்லை. 839 அறிஞரின் அவைக்கு அறிவிலி போதல் கழுவாதகாலைத் தவப்பள்ளியில் வைப்பதுபோல், 840 170 ്ഥിധ அதிகாரம் 84 பேதைமை பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு ஊதியம் போக விடல். 831 பேதைமையு ளெல்லாம் பேதைமை காதன்மை கையல்ல தன்கட் செயல். 832 நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும் பேணாமை பேதை தொழில். 83.3 தி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பதையின் பேதையார் இல் 834 ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும் தான்புக் கழுந்தும் அளறு. 835 பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப் பேதை வின்ைமேற் கொளின், 836 ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை பெருஞ்செல்வம் உற்றக் கடை 837 மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன் கையொன்று உடைமை பெறின். 838 பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண் பீழை தருவதொன்று இல். 839 கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர் குழாஅத்துப் பேதை புகல். - 840 171