பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

கொண்டிருப்பவனைத்தான் அறிவு பெற்றவன் என்று கூறுகின்றார். பன்முறையும் சிந்தித்து அறிதல் வேண்டும்.

சென்ற இடத்தால் செலவிடா தீதுஒரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு. (422),

பலர் நுணுக்கமாக ஆராய்ச்சி செய்திருப்பார்கள். ஆழ்ந்த சிந்தனை படைத்தவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் பிறரை வஞ்சித்துப் பொருள் பறிக்கும் தீய செயல்களையே செய்து கொண்டிருப்பார்கள். அப்படிப். பட்டவர்கள் பெற்றிருக்கும் அறிவினால் யாது பயன்?

அ.கி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும் வெ.கி வெறிய செயின், (175).

மக்களிடையே சிறந்த அறிஞர்கள் என்று சொல்லப் படுபவர்கள் நற்செயல்களைச் செய்யவில்லையென்றால், அவர்களின் அறிவு பயனற்றதேயாகும். ஆதலால் அனைதி. திற்கும் அடிப்படையாக இருக்கவேண்டிய ஒன்று என்ன வென்றால் மனம் தூய்மையாக இருப்பதேயாகும்.

உலகப் பொதுமறையாகிய திருக்குறள் அறநூல் என்று. வழங்கப்படுவதாகும், அறம் சொல்லுகின்ற ஆசிரியர். மனத்தினைத் தூய்மையாக வைத்துக் கொண்டிருப்பது தான் அறம் என்று சொல்கிறார். மனத்தில் எவ்விதத் தீய குணங்கள் சிறிதளவேனும் இருத்தலே கடாது. மனத்தில் குற்றங்களை வைத்துக் கொண்டு வெளிப்படையாகக் செய்யப்படும் செயல்களெல்லாம் வெளிப்பகட்டு ஆரவாரங். களேயாகும்.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல ரே பிற. (34),

இறைவன் வழிபாடு என்பது மனம் தூய்மையினை கு. குறிப்பதாகும். மனத்தில் மாக என்கிற அழுக்கினை