44. குற்றங்கடிதல்
{குற்றங்கள் யாவை என்பதும் வாராமல் காத்தலும்)
1. செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித கீர்த்து. 431
(ப-ரை) செருக்கும் . மதம் என்பதும், சினமும் . கோப மும், சிறுமை - காமமும் [ஆகிய குற்றங்கள்) இல்லார் . இல்லாதவருடைய, பெருக்கம் - செல்வமானது, பெருமிதமேம்பாடான, நீர்த்து . தன்மையினையுடையதாகும்.
(கரை) செருக்கும் (மதமும்), கோபமும், காமமும் ஆகிய குற்றங்கள் இல்லாதவருடைய செல்வம் மேம் பர்டான தன்மையினை உடையதாகும்.
2. இவறலும் மாண்பு இறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு. 432
(ப-ரை) இவறலும் - கொடுக்க வேண்டியதற்குப் பொருள் கொடாதிருத்தலும், மாண்பு - நன்மையின், இறந்த - நீங்கிய, மானமும் . மானமும், மாணா - அளவு கடந்த், உவகையும் - களிப்பும், இறைக்கு - மன்னனுக்கு, ஏதம் - குற்றங்கள் எனப்படும். -
(க-ரை) கொடுக்க வேண்டியவற்றிற்குப் பொருள் கொடாதிருத்தலும், நன்மையில் நீங்கிய மானமும், அளவு கடந்த உவகையும் அரசனுக்குக் குற்றங்களாகும்.
8. தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிகாணு வார். 433
(ப-ரை) பழி - பழிக்கு, நானுவார் . நாணமுற்று
அஞ்சுபவர்கள், தினைத்துணையாம் - தினையளவு
சிறிதான, குற்றம் குற்றமானது, வரினும் - தம்மிடத்தில்
தி. தெ.-13 -