323
3. ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும். 763
(ப-ரை) எலி - எலிகளாகிய, பகை - பகை மிகுந்து, உவரி - கடல் போன்று, ஒலித்தக்கால் - ஒலித்து ஒசையிட் டால், என்னாம் - நாகத்திற்கு என்ன துன்பம் உண்டாகும், நாகம் - அந்த நாகப்பாம்பு, உயிர்ப்பது - மூச்சு விட்ட வுடனே, கெடும் . அவை கெட்டழியும்.
(க-ரை) எலியாகிய படை திரண்டு கடல்போல ஒலித் தாலும், நாகத்திற்கு என்ன துன்பத்தினைச் செய்ய முடியும்? அந்த நாகம் மூச்சு விட்டவுடனே அந்த எலிப்பகை கெட்டுவிடும்.
4. அழிவின்றி அறை போகாது ஆகிவழிவந்த
வன்கண் அதுவே படை, 764
(ப-ரை அழிவு - போரில் கெடுதல், இன்றி - இல்லா மல், அறை போகாது - பகைவரால் கீழறுக்கப்படாத தாய், ஆகி ஆகியிருந்து,வழி . தொன்றுதொட்டுப் பழமையாய், வந்த - வந்த, வன்கணதுவே - வன்கண்மையாகிய வலிமை யுடையதே, படை - சிறந்த படையாகும்.
(க-ரை) போரில் கெடுதல் இல்லாமல், பகைவரால் கீழறுக்கப்படாததாகித் தொன்றுதொட்டு வந்த வலிமை யினையுடையதே அரசனுக்குப் படையாவதாகும்.
5. கூற்று உடன்று மேல்வரினும் கூடிஎதிர் கிற்கும்
ஆற்ற லதுவே படை. 765
(ப-ரை) கூற்று. கூற்று வன், உடன்று . சினங்கொண்டு, மேல்வரினும் . தாக்குவதற்கு த் தன்மேல் வந்தாலும், கூடி - நெஞ்சு ஒத் து, எதிர் நிற்கு எதிர்த்து நிற்கின்ற, ஆற்றல துவே - வலி மையினை புடைய துவே, ப ை. . படையாகும்.