பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 பொருள் 84. பேதைமை பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு ஊதியம் போக விடல். 831 பேதைமையு ளெல்லாம் பேதைமை காதன்மை கையல்ல தன்கட் செயல். 832 நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும் பேணாமை பேதை தொழில். 833 ஒதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதையின் பேதையார் இல். 834 ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும் தான்புக் கழுந்தும் அளறு. 835 பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப் பேதை வினைமேற் கொளின். 836 ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை பெருஞ்செல்வம் உற்றக் கடை, 837 மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன் கையொன்று உடைமை பெறின். 838 பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண் பீழை தருவதொன்று இல். 839 கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர் குழாஅத்துப் பேதை புகல். 84O