பக்கம்:திருக்குறள் புதைபொருள் 1.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குடம்பை

33


பிற குறள்களிலும் இவ்வாறே புதைபொருள்கள் பல புதைந்து கிடக்கின்றன. ஆதலின் குறளை மேற்போக்காகப் படிப்பதைவிட ஊன்றிப் படிப்பது நல்லது. படித்து மகிழ்வதைவிட, அதன்படி நடந்து மகிழ்வது மிகவும் நல்லது.

"வாழட்டும் அன்புள்ளம்! வளரட்டும் அறநெறி!"



7. குடம்பை

        குடம்பை தனித்தொழியப் புட்புறங் தற்றே
        உடம்பொடு உயிரிடை நட்பு

இது கொல்லாமைக்குப் பின்னும் துறவுக்கு முன்னும் கூறியுள்ள "நிலையாமை" என்ற தலைப்பில் உள்ள ஒன்று.

நிலையாமையைப் பற்றிக் கூறவந்த வள்ளுவர், "நிலையில்லாதவைகளை நிலைத்து நிற்பவை என்று எண்ணி வாழும் வாழ்வு ஒரு இழிந்த வாழ்வு" என்று எடுத்த எடுப்பில் கூறியிருக்கிறார்.

அடுத்து, 'நெருநெல்', 'நாச்செற்று', 'நாளென', 'ஒரு பொழுதும்', 'கூத்தாட்டு' என்று தொடங்கும் குறள்களின் மூலம், "உலகம் நிலையாது, வாழ்வு நிலையாது, உயிர் நிலையாது, பொழுது நிலையாது, செல்வம் நிலையாது" என்று கூறிப் பின் இக் குறள் மூலமும் "நட்பு நிலையாது" என்றும் கூறுகிறார். இது வியப்பிற்குரியது.

உற்றார் உறவினர், மனைவி மக்கள் போன்ற எவரையும் நாம் ஒன்றாகவே கருதி ஒருமையிலேயே அழைக்கிறோம். ஆனால் அவர்கள் ஒவ்வொருவரையும் உடலொன்றும் உயிரொன்றும் ஆக இரண்டு எனக் கருதும்படி செய்கிறது இக்குறள்.

தி.—3