பக்கம்:திருக்குறள் புதைபொருள் 2.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

59


திருக்குறளில் “நோய்” என்ற சொல் 34 இடங்களில் காணப்படுகிறது. ஆறு வகையான பொருள்களில் வள்ளுவர் இதனைக் கையாண்டிருக்கிறார்.

“துன்பம்” என்ற பொருளில் வந்த குறள்கள் 14; அவை 261, 315, 359, 429, 442, 1160, 1162, 1174, 1200, 1229, 1241, 1243, 1266, 1303.

‘உடற்பிணி’ என்ற பொருளில் வந்த குறள்கள் 5; அவை 853, 941, 946, 947, 948.

“காமப்பிணி” என்ற பொருளில் வந்த குறள்கள் 11; அவை 1091, 1147, 1159, 1171, 1175, 1176, 1183, 1246 1255, 1280, 1301.

“குற்றம்” என்ற பொருளில் வந்த குறள் 1; அது 821. “வினைப்பயன்” என்ற பொருளில் வந்த குறள் 1: அது 360. “இன்னா” என்ற பொருளில் வந்த குறள் 1; அது இது.

“இன்னா” என்பது “இனிய” என்பதன் எதிர்மறை. “இன்னாதன” என்பது “இனியதல்லாதவை” என்று பொருள்பெறும். இது நல்லறிஞர்களாலே எண்ணத்தகாததும், சொல்லத்தகாததும், செய்யத் தகாததுமாம்.

பெருஞ்சிறப்பைத் தருகிற அருஞ்செல்வங் கிடைப்பதாயினும் பெரியோர் பிறர்க்கு இன்னா செய்யார். பெருஞ் சீற்றத்துடன் ஒருவன் தனக்கு இன்னா செய்த விடத்தும் அறிஞர் அவர்க்கு இன்னா செய்ததில்லை. தான் ஒரு குற்றமும் செய்யாதிருக்க, தனக்கு இன்னாதவற்றைச் செய்தவர்க்கும், இன்னா செய்யாமை இயல் புடையவரது செயல். இன்னா செய்தார்க்கு விதிக்கப் படும் கொடுந் தண்டனை அவர் வெட்கப்படும்படி