84
3. தவம்
268. ஒன்னார்த் தெறலு முவந்தாரை யாக்கலு
மெண்ணிற் றவத்தான் வரும்.
(இ-ள்) இவ்விடத்துப் பகைவரைத் தெறலும், நட்டாசை யாக்குதலுமாகிய வலி ஆராயின், முன்செய்த தவத்தினானே வரும், (எ-று).
இது, பிறரை யாக்குதலும் கெடுத்தலுந் தவத்தினாலே வரு மென்றது. = 8
269. இலர் பல ராகிய காரண தோற் பார்
சிலர் பலர் நோலா த வர்.
(இ-ள்) பொருளில்லாதார் உலகத்துப் பலராதற்குக் காச ணம், தவஞ் செய்வார் சிலர், அது செய்யாதார் பலர் (எ. று).
இது, பொருளுமிதனானே வருமென்றது. 9.
270. வேண்டிய வேண்டியாங் கெய்தலாற் செய்தவ
மீண்டு முயலப் படும்.
(இ-ள்) விரும்பினவற்றை விரும்பினபடியே வருதலால், தவஞ் செய்தலை யிவவிடத்து முயல வேண்டும், (எ-று).
இது போக நுகர்ச்சியும் இதனானே வருமென்றது. 10
4. கூடாவொழுக்கம
கூடாவொழுக்கமாவது மேற்கூறிய தவத்திற்குப் பொருந் தாத ஒழுக்கம். அ.தியாதோவெனில் தவத்திற்கின்றியமையாத பிரமசரியங் காக்குங்கால் உ ட ன் பழகிய காமம் நலியுமன்றே அ. த ைன ப் பொறுத்தலாற்றாதார் மறைந்தொழுகு மொழுக்கம் என்று கொள்க. இதனாற் கூறியறு இல்வாழ்வார்க்குப் பரதாரம்