?
18. ஒப்புரவறிதல்
21 ?. கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமரட்
டென் னாற்றுங் கொல்லோ வுலகு.
(இ-ள்) ஒப்புரவு செய்யுங்காற் கைம்மாறு கருதிச்செய்ய வேண்டா; எல்லார்க்கும் நல்வழி சுரக்கின்ற மாரிக்கு உலகம் கைம்மாறு செய்தலுண்டோ? (எ-று
கடப்பாடு-ஒப்புரவு. ஒப்புரவாவது கைம்மாறு கருதாத கொடையென்று கூறிற்று. 2
213. இடனில் பருவந்து மொப்புரவிற் கொல்கார்
கடனறி காட்சி யவர்.
(இ-ள்) செல்வம் விரிவற்ற காலத்தினும் ஒப்புரவிற்குத் தளரார், ஒப்புரவை யறியும் அறிவுடையோர், (எ-று)
இது, செல்வம் விரிவில்லாத காலத்தினும் செய்யவேண்டு மென்றது. 3
214. நயனுடையா னல்கூர்ந்தா னாதல் செயனிர்மை
செய்யா தமைகலா வாறு.
(இ-ள்) நயனுடையான் நல்கூர்ந்தா னாகின்றது செய்ய வேண்டுவன செய்யாதே யமைய மாட்டாமையாலே (எ-று)
இது, செல்வங் குறைபடினுஞ் செய்வரென்றது. 4
215. ஒப்புரவி னான் வருங் கேடெணி ன..தொருவன்
விற்றுக்கோ டக்க துடைத்து
(இ-ள்) ஒருவன் ஒப்புரவு செய்ததனானே பொருட்கேடு வந்ததென்று சொல்லின், அக்கேட்டைக் கேடாகக் கொள்ளப் படாது; அஃது ஒன்றை விற்று ஒன்றை கொள்கின்றவாணிக மாகக்கொள்ளுந் தகுதியுடைத்து, (எ-று).