T4 அ-2-9 அடக்கம் உடைமை 13
முதலியன. 7. கடுசொற்கள் :
ஒழுக்கமிலி, முல்லைமாறி, நேர்மையிலன், திருடன், செத்தொழி . முதலியன. 6. ஆசிரியர், ‘சொல்வன்மை அதிகாரத்தில்,
ஆக்கமும் கேடும் அதனால் வருதலால் காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு’ - – 642 என்பதும் இதையொட்டியதே. முன்னைய குறளில் உள்ள நாவடக்கம் கொள்ளாமல் போவதால் வரும் கேடுகளை இதிற் கூறியதால் அதன் பின்னர் இது வைக்கப்பெற்றது.
கஉசு . தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு. 129
பொருள்கோள் முறை :
தீயினால் சுட்டபுண் உள்.ஆறும் நாவினால் சுட்ட வடு ஆறாதே.
பொழிப்புரை தீயினால் சுடப்பட்ட புண் உள்புறமாக ஆறி, வெளிப்புறத்து வடுவாகி நிற்கும்; நாவினால் சுடுசொல் கூறியதால் ஏற்பட்ட மனப்புண், புறத்தே ஆறி உள்ளத்து என்றும் வடுவாகி நிற்கும்.
சில விளக்கக் குறிப்புகள் :
1. பொழிப்புரை, பரிதியாரின் உரையைத் தழுவியது, அது. சிறந்த
2. தீயினால் சுட்டபுண் உள் ஆறும் தீயினால் சுடப்பட்ட புண் உள்புறமாக ஆறி, வெளிப்புறத்து வடுவாகி நிற்கும்.
- சுடப்பட்ட புண்ணைச் சுட்டபுண் என்று, செயப்பாட்டு வினையைச் செய்வினையில் கூறினார்.
தீயினால் சுடுவது, நெருப்பினால் சுடுவதோ கொள்ளியாற் சுடுவதோ அன்று. எரிதீயாற் சுடுவதாம். 3. நாவினால் சுட்ட வடு ஆறாதே - நாவினால் சுடுசொல் கூறியதால் ஏற்பட்ட மனப்புண், புறத்தே ஆறி உள்ளத்து என்றும் வடுவாகி நிற்கும்