64
அ-2-16 பயனில சொல்லாமை 20
பின்னர்தான், அறிவு தன் அறியாமை இருளை நீக்குகிறது என்பது மெய்யறிவினார் கருத்து. என்னை?
'அவா இல்லாக்கு இல்லாகும் துன்பம்’ - 368
‘இன்பம் இடையறாது ஈண்டும் அவாஎன்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்'
- 359
‘பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
...................................................மருள்’
- 351
‘இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு’
- 352
'பொருளானாம் எல்லாம்என்று ஈயாது இவறும்
....................................................மருள்’
- 1007
- என்பார் ஆகலின்,
- மனத்தின் மருள் தீர்ந்த பின்னர்தான் மாசறு காட்சி (அறிவு தோன்றும் என்பர் நூலாசிரியர்.
(காட்சி - அறிவு என்பது குறள் 174-இல் விளக்கப் பெற்றது. விளக்கம் ஆண்டுக் காண்க)
- மருள் தீர்ந்த பின்னரே மாசறுகாட்சி ஏற்படும் என்றார், என்க.
‘மருளறு சிறப்பின்' - தொல் : 1230
'தெருளநின் வரவு அறிதல்
மருளது தேர்ச்சி முனைவர்க்கும் அரிதே’
- பரி: 1: 32-33
‘மன்னிய நோயொடு மருள் கொண்ட மனத்தவன்' - கலி: 103: 57.
‘மருளும் உளப்பட வாழ்நர்க்கு' - புறம் : 28 : 3
‘மருளறு புலவ’ -மணி : 9 : 33 .
- தீர்ந்த - நீங்கிய
'பொய்மையும் வாய்மை யிடத்து புரைதிர்ந்த
நன்மை பயக்கும் எனின்'
- 292
- மாசறு - குற்றமற்ற - (352,649,956)
- மாசு - குற்றம். - (34, 278, 601)
2) பொருள் தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார்: பொருட்பயன் நீங்கிய சொற்களை மறதியாகவும் சொல்ல மாட்டார்.