பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கரிகாலச்சோழன்.

5


கரை தான்யங்களும் பர்மா கைத்தொழிற் சாமான்களும் லங்கை முதலிய நாடுகளிலிருந்து ஆகாரத்துக்கு வேண்டிய இதர சாமான்களும் சமுத்திரத்துக்கப்பால் வெகு தூரத்திலிருந்து குதிரைகளும் மரக்கலங்களில் கொண்டுவரப்பட்ட மிளகும் காவேரிப் பட்டணத்தில் சோழர் கடைகளில் ஏராளமாய்க் காணப்பட்டன. தேசம் வெகு செழிப்பாகவும் ஜனங்கள் நாகரிகமுள்ளவர்களாகவும் மன்னர்கள் நீதிமான்களாகவும் தெய்வபக்தி குன்றாதவர்களாகவும் இருந்திருக்கவேண்டும்.


3-ம் அதிகாரம்.
உறையூர் மண்மாரி.

கரிகாலச்சோழன் :- சாரமாமுனி திரிசிராமலையில் நந்தவனத்தில் தாயுமானவர்[1] பூஜைக்காகப் பயிர் செய்திருந்த ஜவந்தி புஷ்பங்களை கர்ப்பிணியாயிருந்த உறையூர் சோழ மன்னன் மனைவிக்காக ராஜ ஸேவகர்கள் திருடிப்போனார்கள். ராஜன் சேவகரைக் கண்டிக்காததால் முனி கோபங்கொண்டு "உறையூர் மண்மாரியால் பாழாகக்கடவது" என்று சாபமிட்டார். அப்படியே பட்டணமும் அழிந்து அரசனும் இறந்தான். ராஜபத்னி காவேரிப்பட்டணம் சென்று அங்கு ஓர் ஆண் மகவு ஈன்றாள். மந்திரி கெட்ட எண்ணங்கொண்டு காவேரிப்பட்டணத்தில் அரசகுமாரன்


  1. திரிசிரபுரத்திலிருந்த தனகுப்தன் என்னும் வைசியன் மனைவி சிவபக்தியில் சிறந்தவளாய் ஒழுகிவருநாளில் கர்ப்பவதியாகிப் பிரஸவித்தாள். அச்சமயம் அவள் தாய் காவேரிப் பெருக்கால் அக்கரையில் நின்றுவிட சிவபிரான் அத்தாயைப் போல் உருவங்கொண்டு அப்பெண்ணிடஞ் சென்று பிரஸவ அறையில் அவளுக்கு உதவி புரிந்தார். அது பற்றியே ஸ்வாமிக்கு வடமொழியில் மாத்ருபூதர் என்றும் தென்மொழியில் தாயுமானவர் என்றும் பெயர் வழங்கலாயிற்று.