26 仄厅J°
கின்றோம்' என்று சில சொற்களைப் பெய்து பொருள்
கொள்க.
எட்டு அடிகளிலும் முதற்சீர்கள் எதுகை பெற்று வருதல் காண்க; இதனை முற்று எதுகை என்பர். இவ்வாறே ஏனைய பாடல்களும் அமைந்திருத்தல் காண்க.
2. வையத்து வாழ்வீர்காள்! (பாவை நோன்பு)
வையத்து வாழ்வீர்காள் நாமும்நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளிரோ; பாற்கடலுள் பையத் துயின்ற பரமன் அடிபாடி, நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நாட்காலே
நீராடி மையிட் டெழுதோம்; மலரிட்டு நாம்முடியோம்; செய்யா தனசெய்யோம்; தீக்குறளை
சென்றோதோம்; ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்.
பதவுரை
வையத்து வாழ்வீர்காள்-உலக நன்மாந்தரே, நாமும் நம் பாவைக்கு-நாமும் நம் பாவை நோன்புக்கு செய்யும் கிரிசைகள்-மேற்கொள்ளும் விரதங்களை கேளிரோ-கேட்பீராக பாற்கடலுள்-திருப்பாற்கடலில் பையத் துயின்ற-யோகத்துயில் மேற்கொண்டுள்ள பரமன்-பரந்தாமனின்