112❖
திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை
உமையாள் புத்திரனே! அடியார் வேண்டுவன அருளும் குமரக் கடவுளே! வஞ்ச மாதர் உறவு எனக்குத் தக்கதாமோ? ஆகாது. ஆதலின். அதனை நீக்கி அடியேனுக்கு உன் திருவருளைச் செய்க என்றதாம்.
24. தந்தன தான்தான் தந்தன தான்தான்
தந்தன தான்தான் - தனதான்
வஞ்சக லோபமூடர் தம்பொருள் ஊர்கள்தேடி
மஞ்சரி கோவைதுது பலபாவின் வண்புகழ் பாரிகாரி என்று ஆசை வாதுகூறி
வந்தியர் போலவீனில் அழியாதே செஞ்சரண் ஆதகீத கிண்கிணி நீலமாலை
திண்திறல் மேல்மயூர - முகமாறும் செந்தமிழ் நாளுமோதி உய்ந்திட ஞானமுறு
செங்கனி வாயிலோர்சொ லருள்வாயே!
பஞ்சவன் நீடுகூனு மொன்றிடு தாபமோட
பைந்தமிழ் வாதுகூறு சமணமூகர்
பண்புறு பீலியோடு வெங்கழி வேறவோது
பண்டித ஞானநீறு தருவோனே!
குஞ்சர சாலைமேவு பைம்புனல் மூதுலாவு
குன்றவர் சாதிகூடி வெறியாடி
கும்படு நாடுவாழ்வு தந்தவ ரோடுவீறு குன்றுதொ நாடன்மேவு பெருமாளே!