பக்கம்:திருப்புமுனை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7


சிறிது தூரம்தான் போயிருப்பான். விளையாட்டு மைதானத்திலிருந்து விரைந்து வந்த மணி அவனோடு சேர்ந்து நடந்தான். இருவரும் மெளனமாக நடந்தார்கள். மணி ஒரு கனைப் புடன் அருளின் மவுனத்தைக் கலைத்தான்.

"அருள்! இன்னிக்கு மாணிக்கம் திடீர்'னு வகுப்பிலே காக்காய் வலிப்பு வந்து கீழே விழுந்ததை நெனச்சா ரொம்ப கஷ்டமா இருக்குடா."

துயரத்தை வெளிப்படுத்தும் வகையில் தன் முகத்தைச் சற்றே வேகமாக வைந்துக்கொண்டு கேட்டான்.

இவர்கன் இருவருக்கும் பின்னால் வந்து கொண்டிருந்த கண்ணாயிரம் இவர்கள் பேச்சின் இடையே புகுந்து பேசினான்.

"ஆமான்'டா, மயங்கி கீழே விழுந்து கை கால்களை இழுத்துக் கொண்டு வாயில் நுரை தள்ள அவன் பட்ட அவஸ்தையை நினைக்கும் போது எனக்குக்கூட ரொம்பக் கஷ்டமாக இருக்குடா."

கண்ணாயிரத்தின் பேச்சில் துக்கத்தைவிட, பாசாங்கு அதிகமாக இருப்பது அருளுக்குத் தெரியாமல் இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருப்புமுனை.pdf/9&oldid=489703" இலிருந்து மீள்விக்கப்பட்டது