பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62 ❖ பூவை. எஸ். ஆறுமுகம்


அவர்களின் பங்களாவுக்குச் சென்ற போது, இப்படிப்பட்ட ஒரு குண்டைப் போடுவார் என்று நான் துளியும் நினைக்கவே கிடையாது. ஆனாலும் மனிதர் ரொம்பவும் கண்ணியமானவர். அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும் போது, இது நம் சொந்த விஷயம், ஆனால் வியவகாரம் ஏதும் இல்லை; அதற்கான ‘ஏதும்’ கிடையாது. எனவே உங்கள் இஷ்டப்படி யோசித்து, உங்கள் அம்மாவுக்கும் யோசிக்க அவகாசம் கொடுத்து, பதமாகவும் பதனமாகவும் முடிவு சொல்லுங்கள். என் அக்காள் மகள் புஷ்பவல்லியின் படத்தைப் பார்த்தீர்களே! நிஜமாகவே அவர்கள் புஷ்பம்தான். சினிமாக்களிலே காட்டுவார்களே, அது மாதிரி பணக்காரர் வீட்டுப் பெண்ணை வலிய வந்து ஒரு ஏழையின் தலையில் கட்டும் போது, அந்தப் பணக்காரர் வீட்டுப் பெண்ணுக்கு ஏதாவது ஒரு ‘ஒச்சம்’-குறைபாடு இருக்குமே-அதுபோல, இங்கே எதுவும் இல்லை. என் கவலை யெல்லாம், என் சகோதரியின் பெண் உகந்த இடத்தில் போய் வாழ்க்கைப்பட வேண்டுமென்பதுதான். உங்களிடம் பொறுப்பும் கடமையும் மிகுந்துள்ளன. ஆகவே, உங்களிடம் பங்கு பெற வரும் பெண் நிச்சயம் மனம் கலங்க நேரிடவே நேரிடாது. வாணியின் துணைக்கு லக்ஷ்மியும் வந்துவிட்டால், அப்புறம் உங்களுக்கு என்ன கஷ்டம்? பேசாமல் உங்கள் இலக்கியப் பணியைச் சிவனேயென்று தொடர்ந்து நடத்தலாமே! ஆகவே தீர யோசித்துச் சொல்லுங்கள். மனிதர்களின் அன்றாட நடவடிக்கைகளில் பொருளாதாரம் குறுக்கிடுவதைப் போலவே மனிதர்களின் காதல் பிரச்னைகளிலும் இந்தப் பொருளாதாரம் இதுவரை குறுக்கிட்டுக் கொண்டுதான் வந்திருக்கின்றது. ஆனால்