82 ❖ பூவை. எஸ். ஆறுமுகம்
சந்தித்தார்கள். மெளனமான குறுஞ்சிரிப்பு இடைவழியில் வழிந்தது!
வீட்டுக்கு வந்ததும், இருட்டியது. வீட்டில் மிதந்த ஒளியில், தம் தோல் பையைப் பிரித்தார் ஞானசீலன். ரெயில் பெட்டியில் கிடைத்த புத்தகத்தைப் புரட்டினார். பெங்குவின் புத்தகம் அது. அதைப் புரட்டியபொழுது, ஒரு கார்டு இருக்கக் கண்டார். ‘குந்தவ்வை’ என்ற கதாசிரியைக்குக் கதை தேர்வு பெற்ற விவரம் சொல்லித் தாம் அனுப்பிய கடிதம் அது. ‘அது இங்கே எப்படி வந்தது?. யார் இந்தக் குந்தவ்வை?...’
பையைப் பிரித்த அவர் கையில் டைரி ஒன்றும் தட்டுப்பட்டது. அது வாணியின் டைரி!...
புரண்ட நாட்குறிப்பின் தாள்களிலே ஞானசீலனது நெஞ்சின் அலைகளும் புரண்டன; நெஞ்சின் அலை களிலே விழிகளது சுடுநீரின் அலைகளுமா புரள வேண்டும்?...
14. ஸ்ரீராமகிருஷ்ணரும்
மஹாத்மாவும்!
மனிதனை எண்ணங்கள் ஆளுகின்றன.
அதுபோல, எண்ணங்களை மனிதன் ஆளுகிறான்.
காலத்தினால் மனிதன் சிறக்கிறான்.
காலத்தைக் கொண்டு மனிதனும், எண்ணங்களினால் அவனது மனிதத்தன்மையும் வரலாற்றுச் சிறப்புப் பூண வேண்டுமென்ற தனிப் பண்பு எல்லோருக்கும்