பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69


இனமறியாத இன்பத் தவிப்பில் கட்டுண்டு கிடந்த அவர், ஐயையோ!' என்ற திகில் மண்டிய ஒலம் கேட்டுத் திரும்பினர். ராஜசிம்மன் வியர்க்க விறுவிறுக்க திரும்பி ஓடி வந்து நின்ருன்.

  • ராஜா...'

'மாமா, அங்கே பாருங்க! யாரோ பைத்தியம் போலிருக்கு! ஒடி வந்து என்னைக் கெட்டியாப் பிடிச்சு முத்தமிட்டு விடவேமாட்டேன் என்று விட்டது நல்ல வேளை, நம்ப வேலைக்காரன் அதை விலக்கி என்னே விடுவித்தான்!” குழந்தை அழுதான். என்ன நினைத்தாரோ! முருகையா எழுந்து ஹாலே விட்டு வெளியே அடி எடுத்து வைத்தார். அதே சமயம் தன் வேலையாளின் பிடியினின்றும் திமிறியோடிய அந்தப் பெண் உருவத்தை நிமிர்ந்து நோக்கினர். & பூங்கொடி!' முருகையா சிலையாய்ச் சமைந்துவிட்டார். • • Lofri ofr!’’ -

ராஜா'

"ஏன் மாமா ஒரு மாதிரியா இருக்கீங்க?" ஒண்னுமில்லே ராஜா, நீ போ ஸ்கூலுக்கு.” அவன் ஒடிச் சென்முன். எங்கே அவன் அந்தப் பைத்தியத் தைப் பற்றிக் கேட்டு விடுவானே என்ற அச்சம் முருகையாவுக்கு இருந்தது. ஆனால் அவன் அதைப்பற்றி மறந்து போனது அவருக்கு அமைதி தந்தது எனினும், மனதைக் குடைந்து கொண்டிருந்த அந்தச் சம்பவத்தை அவர் எவ்விதம் மறக்க முடியும்?