பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76


அதே சமயம் பூங்கொடியை நினைத்தார். அந்தச் சிரித்த முகம்-தலை மயிரில் அழகான சிவப்பு ரோஜாஆனந்தத்தின் ரகசியத்தை அறிவிக்கும் ஆழங்கான இயலாத கண்கள்-இதழ்களிலே குமிழ் சிரிப்பு-இறுதி யில் விதி மாற்றம் கொடுத்த பைத்தியக் கோலம்-! அவர் பூஜை அறைக்கு ஒடி அம்பிகையின் முன் மண்டி யிட்டுப் பிரார்த்தித்தார். "மாதா, உன் அன்பிற்கு உவமை ஏது? என் ராஜாவை அவன் அன்னேயிடம் சேர்த்துவை. அவள் கணவன் சிறையிலிருந்து வெளி வருவதற்குள் பேதலித் திருக்கும் பூங்கொடியை பழைய பொற்கொடியாக மாற்றுவது உன் கையில்தான் இருக்கிறது. தாயே, இனியும் சோதிக்காதே, கடைக்கண் நோக்கு. நீ கருணைக் கடல்!'