பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 : 6 றுங்கள். பட்டனத்திலேயே கல்யாணத்தைச் சிறப்பாக நடத்துகிறேன். நீங்கள்தான் இன்று என் தெய்வம். விதியின் விளையாட்டு விசித் திரமானது. ஒட்டாண்டியாக ஒடி வந்த நான் இன்று பம்பாய் சேட்ஜி ஒருவரால் இந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறேன். உடன் பதில் தெரிவியுங்கள். செ. தாயகமுத்து. விடிந்தது. நாயகமுத்து அமர்க்களமாக உடுத்துக்கொண்டு புறப்பட்டார்;கார் புறப்படப்போன தருணத்தில்,மங்கள நாயகி ஒடி வந்தாள். மங்களா, உன் கல்யாணம் வைகாசியில் முடிந்துவிடும் அம்மா. புவனநாதனுடைய அப்பா ட்ரங்கால் போட்டுப் பேசினர். இப்போது அவரைப் பார்த்துவரத்தான் ஊருக்குப் போகிறேன். நாளைய தினம் வந்திடுறேன் அம்மா’’ என்ருர். மங்களா ஆனந்தக் கடலாடிஞள். புறப்பட்ட கார் கபாலீசுவரர் சந்நிதியைக் கடந்த நேரத்தில், டிரைவரிடம் காரை நிறுத்தச் சொன்னர், நாயகமுத்து. இறங்கி விரைவாக நடந்தார். பூத லிங்கம்!’ என்று கூப்பிட்ட வண்ணம் ஓடினர். பூதலிங்கத்தைக் கண்டதும், செயலிழந்து போனர். நாயகமுத்து. என்ன கோலம் இது?...பூதலிங்கம் ஏன் இப்படி இருக்கிருர்? லட்சக் கணக்கான சொத்துக்கு உடையவரான இவருக்கு ஏன் இந்த நிலை?...என்னைப் பழி தீர்த்துக்கொண்ட இவருக்கு ஆண்டவன் சோதனைக் காட்டிவிட்டாளு? -