பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு

169


சத்தி தத்துவமும் முன் பின்னகத் தோன்றும் முறைபற்றி அவ்விரண்டு முறையே தமையன் தங்கை எனவும் உலகி யல் உறவில் வைத்து உருவகம் செய்யப்பெறுவன . அம்மையோடு அப்பனுக்குள்ள பிரிக்கவொண்ணுத தொடர் பினேக் குறிக்கும் இவ்வுருவக முறையினே யுளங்கொண்ட திருவாதவூரடிகள்,

  • எம் பெருமான் இமவான் மகட்குத்

தன்னுடைக் கேள்வன் மகன் தகப்பன் தமையன் :

(திருவாசகம் திருப்பொற்சுண்ணம் 13) எனவும்,

'தவளத்த நீறணியுந் தடந்தோளண்ணல் தன்னுெருபா

லவள் அத்தணும் மகளும் தில்லையான் ?

(திருக்கோவை-112)

எனவும் இறைவனை உறவுமுறை குறித்துப் போற்றியுள் ளார். தத்துவத் தோற்றம்பற்றிய இவ்வுருவகத்தின் கருத் தினை விளக்கும் முறையில் அமைந்தது,

'சிவம்சத்தி தன்னையின்றும் சத்திதான் சிவத்தையின்றும் உவந்திருவரும் புணர்ந்திங் குலகுயி ரெல்லாமீன்றும் பவன்பிரம சாரியாகும் பான்மொழி கன்னியாகும் தவந்தரு ஞானத்தோர்க்கித் தன்மைதான்

தெரியுமன்றே: (156)

என வரும் சிவஞான சித்தியாராகும்.

கனகமார் கவின் செய் மன்றில் அனக நாடகற் கெம் அன்னை மனைவி தாய் தங்கை மகள் ??

(சிதம்பரச் செய்யுட்கோவை) என வரும் குமரகுருபரர் பாடலும் இங்கு ஒப்புநோக்கத் தகுவதாம்.