பக்கம்:திருமாவளவன்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிகாலனும் காவிரியும் 89.

5. பதினோம் நூற்ருண்டு முதல் தெலுங்கு நாட் டில் வாழ்ந்த அரச இனங்கள் பலவும், கிரிலோசனன் கதையைப் பலவாருகத் தம்மோடு தொடர்புபடுத்திக் கூறுவதை வழக்கமாக மேற்கொண்டுள்ளன. ஆதலாலும்,

6. இக்கதையைக் கூறும் சான்றுகள் பலவும் காலத்தால் மிகமிகப் பிற்பட்டன. ஆதலாலும்,

7. அவற்றுள் பல, திரிலோசனனுக்கும் கரிகால லுக்கும் உள்ள தொடர்பைக் குறிப்பிடவில்லை ஆதலாலும், *. 8. பழந்தமிழ் இலக்கியம் ஒன்றும், கரிகாலன் காவிரிக்குக் கரை அமைத்ததுபற்றி ஒன்றும் குறிப்பிட வில்லை ஆதலாலும், -

9. மகாவம்சத்தின் பழங்குறிப்புக்கள் ஒன்றும், சோழர் படையெடுப்புப்பற்றி ஒன்றும் கூறவில்லை ஆத

லாலும்,

10. கரிகாலன் காலம் கி. பி. முதல் அல்லது இரண் டாம் நூற்ருண்டைச் சார்ந்தது. ஆதலாலும், கரிகாலன், காவிரிக்கரை அமைப்பு, கரைகட்டப் பகை மன்னர் பணிக் கப்பெற்றது, வாராத கிரிலோசனன் கண்னே அழித் தது ஆக இவை உண்மை என ஒப்புக்கொள்வதற்கில்லை என்பர் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியாரவர்கள்."

பழந்தமிழ் இலக்கிய ஆசிரியர்கள் எல்லாம் வரலாற்று நூலாசிரியர்கள் (Historians) அல்லர்; அவர்கள் புலவர் களே. அவர்கள் தொழில் எல்லாம், தம்மைப் பேணிய பேர் அரசர்களைக்-குறுநில மன்னர்களைப்-பிறகொடை வள்ளல்களைப் பாராட்டிக் கூறுவதே; அவர்தம் வர லாற்றை வரைவது அல்ல; தங்களைப் பேணியோரைப்

1. Studies in Chola History and Administration P. 59-71.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/101&oldid=578875" இலிருந்து மீள்விக்கப்பட்டது