பக்கம்:திருமாவளவன்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 திருமாவளவன்

யது என அறியாளாய் உண்ட பிழைக்காக, அவள் தமர், எண்பத்தோர் யானைகளும், அவள் கிறையளவுள்ள பொற் பாவையும் தருவதாகக் கூறவும் ஏற்றுக்கொள்ளாது அவளைக் கொல்புரிந்த கன்னன் கொடுஞ் செயலைப் பலர் அறியத் தாற்றி வருவதால் அறியலாம்."

பரணர், தமிழகத்தின் பல இடங்களிலும் கிரிந்து, ஆங்காங்குகிகழ்ந்த பற்பல வரலாறுகளே அறிந்தவராதலின் தம் பாட்டுக்களில், அவை அகத்துறை தழுவியதாயினும், அன்றி, புறத்துறை தழுவியதாயினும், யாதேனும் ஒரு வரலாற்று கிகழ்ச்சியை இடையில் புகுத்திக் கூருது போகார். வரலாற்றுக் குறிப்புக்கள் இவர் பாட்டுக்களில் காணப்படுதல்போலப் பிறர் எவர் பாட்டுக்களிலும் காணப் படுதல் இல்லை. இதல்ை பழையவரலாற்றை ஆராயப் புகுவாற்குப் பாணர்பாக்கள் பெரிதும் துணை புரிவ. வாயின. -

- பாணரால் பாடப் பெற்ருேருள், சேரமான் குடக்கோ g நெடுஞ் சேரலாதனும், சோழன் வேற்பஃறடக்கைப் பெரு விறற்கிள்ளியும், உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னியும், கரிகாற் பெருவளத்தானும், பேகனும், அதிகமானஞ்சியும் சிறந்தோராவர். வெண்ணி வாயிலில், வேந்தர் இருவரும் வேளிர் பதிைெருவரும் கூடிக் கரிகாலனெடு பொருத போரில், அவன் அவர்களே வென்ற வரலாறும், அவ் வெற்றிகுறித்து அவன் தாய் பிறந்த அழுத்துரில் வெற்றி

1. மண்ணிய சென்ற ஒண்ணுதல் அரிவை புனல்தரு பசுங்காய் கின்றதன் தப்பற்கு ஒன்பதிற்று ஒன்பது களிற்றெடு அவள் நிறை பொன்செய் பாவை கொடுப்பவும் கொள்ளான் பெண்கொலை புரிந்த கன்னன் போல வரையா நிரையத்துச் செலீஇ யரோ.' -குறுங்: 292.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/112&oldid=578886" இலிருந்து மீள்விக்கப்பட்டது