பக்கம்:திருமாவளவன்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிகாலன் பெயர்க்காரணம் 43

இதனுல், பரணர் (அகம்-125, 246, 376), நக்கீரர் (அகம்-141), மாமூலனர் (அகம்-55), கருங்குழலாதனர் (புறம்-7, 224), கழாத்தலையார் (புறம்-65), வெண்ணிக் குயத்தியார் (புறம்-66) ஆகஇவர்களால் பாடப்பெற்ருேன் முதற்கரிகாலன் என்பதும், இவர்கள் பாடல்களால் அறியப் பெற்ற புறப்புண் காணி வடக்கிருந்த பெருஞ்சேரலாத ைேடு போரிட்டோன்' இம்முதற் கரிகாலனே என்பதும், வடநாடு சென்ருேன் இவனல்லன் என்பதும், கடியலூர் உருத்திரங் கண்ணனர் (பட்டினப்பால) முடக்காமக் கண் ணியார் (பொருநராற்றுப்படை) இவர்களால் பாடப்பெற். ருேனும், முடத்தாமக் கண்ணியார் கூற்றுப்படி உருவப் பஃறேர் இளையோன் சிறுவனும் ஆகிய கரிகாலன், இரண் டாம் கரிகாலன் என்பதும், இவனே வடகாடு சென்ருேன் என்பதும் அவர் கருத்தாதல் தெளிவாம். -

- திருவாளர் பிள்ளையவர்கள், இலங்கை வரலாற்றைக் கூறும் மகாவம்சம், கி. பி. 171-198-ல் ஒரு கயவாகுவை யும், கி. பி. 12-ம் நூற்ருண்டின் முற்பகுதியில் ஒரு கயவா குவையும் குறிப்பிடுகிறது; இவ்விருவருள் செங்குட்டுவன் காலத்தில் வாழ்ந்தவன் முதற் கயவாகுவேயாதலின், அவன் காலம் அவ்விரண்டாம் நூற்றண்டின் இறுதிக் காலமே; வடக்கே கங்கையாறுவரை பிரபலமுற்றிருந்த ஆந்திர சதகர்ணி அரசன் யக்ஞபூரீ என்பவன் கி. பி. 166196-ல் அரசாண்டவனுவன் ; இவனே, சிலப்பதிகாரத்தில் கூறப்பெற்ற, செங்குட்டுவன் நண்பன் நூற்றுவர்கன்னர் என்பவன். இவன் காலம் கயவாகுவின் காலத்தோடு ஒற்றுமையுடையது. ஆகவே, - செங்குட்டுவன் காலம் அவ்விரண்டாம் நூற்ருண்டின் இறுதிக் காலமே ஆகும்.

1. புறநானூறு : 65, 66. - 2. தமிழ்ப் பொழில் துனர், 13 பக்கம் 34; 55.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/55&oldid=578829" இலிருந்து மீள்விக்கப்பட்டது