கரிகாலன் பெற்ற வெற்றிகள் $9.
.#
யார், “ பால் மணம் அருத மிக இளமைக் காலத்திலேயே, சிங்கக் குருளே முதல்வேட்டையாகப் பெருங்களிறு ஒன் றைக் கொன்றதைப்போலக் கரிகாலன் தன் இளமைக் காலத்திலேயே பேர்.அரசர்தம் கூட்டு முயற்சியை அடியோடு முறித்தொழித்தான் ’ எனப் பாராட்டுவா ராயினர்.1 -
வாகை என்ற ஊரின்கண், கரிகாலன் பெற்ற வெற்றி ஒன்றைக் குறிப்பிட்டு, அதில் அவனெடுபொருத ஒன்பது அரசர்கள், நண்பகலிலேயே தோற்றுத் தம் குடை முத லாயினவற்றையும் களத்திலேயேவிட்டு ஓடினர் எனப் பரணர் கூறுவர்." -
வாகைப்பறந்தலையில், நன்னன், நார்முடிச் சேர லோடு பொருது வீழ்ந்தான் என்ற செய்தி, பதிற்றுப்பத் தினும், அகநானூற்றினும் காணப்படுகிறது. நன்னன்
1. ஆளி நன்மான் அணங்குடைக் குருளை
மீளி மொய்ம்பின் மிகுவலி செருக்கி முலைக்கோள் விடாஅ மாத்திசை ஞெரேரெனத் தலைக்கோள் வேட்டம் களிறட் டாங்கு”
- - -பொருநர்: 139-142.
2. பெருவளக் கரிகால் முன்னிலைச் செல்லார் -
குடா வாகைப் பறந்தலே ஆடுபெற ஒன்பது குடையும் கன்பகல் ஒழித்த பீடில் மன்னர் ’ - -அகம்: 125.
3. பொலந்தேர் நன்னன் -
சுடர்வீ வாகைக் கடிமுதல் தடித்த . தார்மிகு மைந்தின் நார்முடிச் சோல்." -பதிற்று. 40.
4. 'இரும்பொன் வாகைப் பெருந்துறைச் செருவில்
பொலம்பூண் நன்னன் பொருதுகளத்து ஒழிய வலம்படு கொற்றம் தந்த வாய்வாட் களங்காய்க் கண்ணி நார்முடிச் சோல்." -அகம் 199.