பக்கம்:திருமுருகாற்றுப்படை-பொழிப்புரை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழிப்புரை 3 f

தைக் கொடுத்தது; ஒரு முகம், வேதமந்திரமுறைப் படியே சம்பிரதாயத்தினின்றும் வழுவாத அந்தணர் களுடைய யாகங்களே நன்கு நிறைவேற்றத் திருவுள் ளங் கொள்ளும்; ஒருமுகம், நூல்களாலும் ஆசிரியர் களாலும் விளக்கமுருமல் எஞ்சிய பொருள்களே, அவற்றை உணரப்புக்க ஞான வேட்கை உடையார் இன்பம் அடையும்படியாக ஆராய்ந்து, சந்திரனேப் போலத் திசையெலாம் விளக்கும்;ஒருமுகம் செறுகின்ற வர்களே அழித்து,வந்தபோர்களைப் போக்கிக் கறுவுதல் கொண்ட உள்ளத்தோடே கள வேள்வியைச் செய் தது; ஒருமுகம் குறவர் மடமகளும் கொடிபோன்ற இடையையுடைய மெல்லியலாளும் ஆகிய வள்ளி நாச்சியாரோடு இன்பம் புணர்ந்து மகிழ்ந்தது;

108-118. அவ்வாறு அந்த ஆறு திருமுகங்களும் தமக்குரிய கடமைகளே ப் பயின்று செய்து வருவத ேைல (அவற்றிற்கு ஏற்ப அமைந்து) பொன் ரைம் தொங்கும் அழகிய பெருமையை உடைய மார்பிலே உள்ள சிவந்த வரிகள் தம்வரையில் வர அவற்றை ஏற். றுக் கொண்டனவும், வலியையுடையனவும், ஒளிவீசி, கொடுத்தலால் பெற்ற புகழ் கிரம்பி, கண்டார் உள் ளத்தை வசமாக்கி, உள்வாங்கி மேலே கிமிர்ந்தனவு மாகிய தோள்களில்-ஆகாயத்திலே குரியனது வெம் மையைத் தாங்கிச் செல்லுகின்ற கடமையை உடைய, முனிவர்களைப் பாதுகாக்கும் பொருட்டு உயர்த்தியது ஒரு கை:இடையிலே வைத்தது ஒரு கை:ஒரு கைஅங்கு சத்தைச் செலுத்த மற்ருெரு கை அழகைப் பெற்ற: ஆடையை உடுத்த துடையின் மீதே கிடந்தது; இரண்டு கைகள் வியப்பையும் கருமையையும் உடைய கேடயத்தையும் வேலாயுதத்தையும்வலமாகச் சுழற்ற,