பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27


எனவரும் இத்திருப்பாட்டில் அம்மையப்பராகிய இறைவரைக் 'கடவுள் ஒருவர்' என ஒருவர் என்னும் இயற்றமிழ்ச் சொல்லால் குறித்துப் போற்றியுள்ளமை இங்கு உளங்கொளத் தகுவதாகும்.

இதுகாறும் எடுத்துக் காட்டிய அருளாளர்கள் வாய்மொழிகளாலும், அவை பற்றிய விளக்கங்களாலும் உலகுயிர்களை இயக்கியருளும் அம்மையப்பராகிய முழு முதற் கடவுள் ஒருவரே என்பதும் 'ஒன்றே குலமும் ஒருவனேதேவனும்' எனத் திருமூலநாயனார் வற்புறுத்திய ஒரு தெய்வக் கொள்கையினையே போற்றுதற்குரிய தவப்பெருஞ் செல்வராகிய அருட்பிரகாச வள்ளலாரும் தாம் பாடிய திருவருட்பாவில் வலியுறுத்தியுள்ளார் என்பதும் இனிது விளங்கும்.