பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$20 திருவருட் சிந்தனை

சலுகை வேண்டாம், உறுதியுடன் ஒழுக அருள்க!

இறைவா, நினைப்பு மாத்திரையில் உலகத்தை இயக்கும் தலைவனே. நின் ஆற்றலுக்கு ஆயிரம் ஆயிரம் போற்றிகள். நான் செய்யும் பணியில் வெற்றி பெற வேண்டும். நின்னருள் பெற்று உய்யும் இன்ப அன்பு வேண்டும். . . . . . . . .

அன்பும், வெற்றியும் பெறுவதே வாழ்க்கையின் குறிக்கோள். இவற்றை அடைய எனக்குப் பணம் தேவை. அள்ளித்தருக. இறைவா, என்ன சிரிக்கிறாய்? சதுப்பு நிலத்தில் மாளிகை கட்டஇயலுமா? நிற்குமா? களர் நிலத்தி பயிர் வளருமா? இறைவா. இது என்ன கேள்வி:

சதுப்பு நிலத்தில் மாளிகை நில்லாது. களர் நிலத்தில் பயிர் வளராது. இறைவா, அதுபோலச் சலுகைகளால், உறுதியும் திண்மையும் இழந்துள்ள மனத்தை உட்ையார் எந்தக் குறிக்கே ளையும் அடைய இயலாது. --- or- or

என்னுடைய குறிக்கோள் நிறைவேற, பணம் முதல் தேவையில்லை. இரண்டாவது தேவைதான். முதல் தேவை உறுதியான தீர்மானமுடைய மனம் வேண்டும். தீர் மானத்தை நிறைவேற்ற சரியான, விதிமுறைகள் வகுக்கப் பெறுதல் வேண்டும். -

குறிக்கோளுடைய வாழ்க்கைக்குத் தீர்மானமும் விதி முறைகளும் எல்லாவற்றையும் விட முக்கியமானவை. வலிமையான மனம், தெளிவும் உறுதியும் மிக்கபுத்தி, ஊசி லாடாத கிந்தனை.இவற்றை அருள் செய்க: என்னிடம் தெளிவான தீர்மானங்கள் உண்டு. ஆயினும் உறுதியான கடைப்பிடிப்பு இல்லை. . . . . ; :

இறைவா, உறுதியான கடைப்பிடிப்பில் நிற்கும் இயல்பினை அருள் செய்க எனக்குச் சலுகை வேண்டாம் வாழும் நெறியை அருள் செய்க. . x -