பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவத்திரு குன்றக்குடி அடிகளச் 87

என் இயக்கம் பயன் பாறடு இன்னருள் புரிக

இறைவா, ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே! போற்றி! போற்றி. இறைவா, நீ பெரியோய்! அதே போழ்து எளியோனாகவும் விளங்குகின்றாய்!

இறைவா, பொருளில் பெரியது எது? சிறியது எது? தங்கம் விலைமதிப்புள்ள பொருள்தான். உப்பு, விலை குறைவான பொருள்தான். ஆனால் பயன்பாட்டில் உப்பே.சிறந்தது: உப்பு இன்றி. வாழ்தல் இயலாது.

தான் தோற்றத்தை-மதிப்பை வைத்துப் பொருளின் தரத்தை நிர்ண்யிக்க இயலாது. எல்லாப் பொருளும் பயன்

பாட்டுக்கு உரியனவேயாம். இவைகளில் நான் யாதொன் றையும் அலட்சியப்படுத்தக்கூடாது. . . .

வேலைகளில் சிறிய வேலை. பெரிய வேலை ஏது: பயன்பாட்டு நிலையே அளவுகோல் அருள் செய்க எல்லாப் பொருள்களையும் பாதுகாப்பாக வைத்துப் போற்றிப் பயன் கொள்ளும் பாங்கினை அருள் செய்க! . . . .

எந்த ஒரு பண்ரியும் அதனதன் நிலையில் சிறப்பானதே, பயனுடையதே என்று கருதிச் செயற்படும் வாழ்க்கைப் போக்கின்னையே அருள்செய்க: இறைவா. அருமை என்பது மதிப்பைப் பொருத்தத்ன்று. பயன்பாட்டு நிலையே!

இறைவா, நானும்கூட பெரிய நிலையில் இருப்பது முக்கியமல்ல. நான் எளிய்ன்ாக, புயன்பாட்டு நிலையில் வாழ்க்கையை நடத்தும் இயல்பினை ஏற்று வாழ்ந்திட அருள் செய்க: ‘ 5 * : r

உலகத்தின் இயக்கம் புயுன்பாட்டிலேயே இருக்கிறது இறைவா. அருள் செய்க! -