95 இ-ள் நீ குருவுண்மை கொண்டமையால் எமக்கு வரும் பயனென்ன? யாவைெருவனுக்கு யாவை சில நூற் பொருள்கள் குரவனையின்றி யுனா முன்னெடுபின் மலே வறத் தோன்.அம், அர்.நாற்பொருள்கள் அவனைத் தமக்குக் குரவனக அவாவி நிற்கும்பொழுது இம்மது கலையினை இழி வாயாக என்க. குருவுண்மை கொள்ளாயாயின் என்பது எஞ்சி கின்றது, இதல்ை யாதொரு ஊற்பொருளுங் குவனே யின்றி யுணரப்படா வென்பது கூறப்பட்டது. விளக்கம்: உயிர்களின் பக்குவமுணர்ந்து மெய்யுணர் வினே அறிவுறுத்தவல்ல குருவாவான் இறைவன் ஒருவனே என்பது உணர்த்துகின்றது. ஆன்மாக்களின் பக்குவமுணர்ந்து மெய்யுணர்வருளிப் பாசத்தினே நீக்கும்பணியில் எம்மையொத்த பாசப்பிணிப் புடைய பசுக்களால் ஆவதென்ன? பரிபாகம் இல்லாதானுக்கு அறிவிக்கப்புகின் அவனுக்கு எவைதான் விளங்கும்? ஆகவே அவ்வவ்வுயிர் தமக்கு உயிர்க் குயிராயுள்ள அம்முதல்வனேயே ஆசிரியனுகத் தெளிந்து விரும்பி வழிபட (யாவும் நன்கு விளங்கும்; எனவே இறைவன் வேறு ஆசிரியன் வேறு எனப் பிரித்துணரும் இம்முரண்பாட்டினேத் தவிர்வாயாக என்ப தாம். எமக்கு என்.எம்மால் ஆவது என்ன, உருபு மயக்கம். அவ்வத்தமக்கு அவன்.அவ்வவ்வுயிர்கட்கு உயிர்க்குயிராய்ப் பிரிவின்றி நிற்கும் அம்முதல்வன்.அவ்வத்தமக்கவனே வேண்ட யாவும் தெரியும் ஆகவே இறைவன் வேறு குருவேறு எனக் கருதும் இம்முரண்பாட்டினத் தவிர்வாயாக என வேண்டுஞ் சொற்கள் வருவித்துரைக்கப்பட்டன.
பக்கம்:திருவருட் பயன்.pdf/118
Appearance