«Ч, , Ліг , Frr திருவருணேக் கலம்பகம்
,ை பும் தோழியருடன் பூக்கொய்து விளையாடுதற் கென்று .ன்,சோலையிற் சேர்ந்த வளவிலே, ஒவ்வொரு நிமித்தத்தால் தோழியர் பிரிய அக்கன்னிகை அங்குத் தனித்து நின்ற சமயத் திலே, ஒவ்வொரு நிமித்தத்தால் பரிவாரங்கள் பிரியத் தனிப் பட்டவய்ை அப்புருஷன் அங்கு வந்து சேர, இருவரும் ஊழ் வினை வசத்தால் இங்வனம் தற்செயலாய் ஒரிடத்திலே சந்தித்து ஒருவரையொருவர் கண்டு காதல்கொண்டு காந்தருவ விவாகக் கிாமத்தாற் கூடி உடனே பிரிய, பின்பு மற்றுஞ் சில களவுப் புணர்ச்சிக்கு உரியவகைகளால் அத்தலைமகளது கூட்டுறவைப் பெற்ற தலைமகன், பின்பு அவளை வெளிப்படையாக மனஞ் செய்து கொள்ளுதற் பொருட்டுப் பொருள்தேடி வருவதற்காக அவளைப் பிரிந்து செல்ல, அந்நிலையிற் பிரிவாற்ருது மிக வருங் கிய தலைமகளைச் செவிலித்தாய்மார் எதிர்ப்பட்டு அவளது வடிவு வேறுபாட்டை நோக்கி இவள் இங்ங்னம் மெலிதற்குக் காரணம் என்னே ? என்று கவலையுற்றுக் கட்டுவிச்சியைக் குறி கேட்க, அவளும் தன் மரபின்படி ஆராய்ந்து இவளுக்கு முருகக் கடவுள் ஆவேசித்த தொழியப் பிறிதொன்றுமில்லை என்று கூற அது கேட்ட செவிலித்தாயர், உடனே, தலைமகள் பக்கல் தமக்குள்ள அன்பின் மிகுதியால், ஏதேனும் ஒரு தெய்வத்தை வழிபட்டாகிலும் இவளை வுயிர்த்திருக்கப் பெறில் அதுவே நமக்கு ஆத்ம லாபமென் றெண்ணி, வழியல்லா வழியிலே யிழிந்து, அதற்குப் பரிகாரமாக வேலனெனப்பட்ட வெறி யாட்டாளனை யழைப்பித்து அவனைக்கொண்டு ஆடு பலியிடுதல், கள்ளிறைத்தல், இறைச்சி தாவுதல், கருஞ்சோறு செஞ்சோறு வைத்தல், ஆவேசம் ஆடுவித்தல் முதலிய காரியங்களை இடை விடாது ஒன்றன்மே லொன்முகச் செய்யத் தொடங்க, நோயொன்றும் மருந்தொன்று மாதலால், தான் காதலித்த புருஷோத்தமனை தலைமகனது தகுதிக்கு எலாத அச்செயல்