பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இல்லற வியல்

இ-ள்:- சான்றோர்க்கு எல்லா விளக்கும் விளக்கு அல்ல - சான்றோர்க்கு எல்லா (அறங்களினாலும் உண்டான) ஒளிகளும் ஒளிகள் அல்ல; பொய்யா விளக்கே விளக்கு - பொய்யா (மையான் உண்டான) ஒளியே ஒளியாகும்.

[விளக்கு - விளக்கம் - ஒளி - நிலையான புகழ்.]

இது, சான்றோர்க்கு வாய்மை இன்றியமையாதென்று கூறிற்று. ௧00.

௧௧-வது.-செய்ந் நன்றி யறிதல்.

செய்ந்நன்றி யறிதலாவது, பிறர் செய்த (தீமையை மறந்து) நன்மையை மறவாமை. (இஃது, இல்வாழ்வாரும் அவரால் ஓம்பப் பெற்ற விருந்தினரும் கைக்கொள்ள வேண்டுவதொன் றாதலின், வாய்மை யுடைமையின் பின் கூறப் பட்டது.)

றவற்க மாசற்றார் கேண்மை, துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு,

இ-ள்:- துன்பத்துள் துப்பு ஆயார் நட்பு துறவற்க - (தனக்குத்) துன்பம் வந்த காலத்து வலியாயினர் நட்பை (எக்காலத்தும்) விடாதொழிக. மாசு அற்றார் கேண்மை மறவற்க - குற்றமற்றாரது நட்பை (எக்காலத்தும்) மறவாதொழிக.

(இம்முதற்குறளை "மறவற்க மாசற்றார் கேண்மை"' என்று தொடங்கியதே, இவ்வதிகாரத்திற்கு முந்தியது "வாய்மையுடைமை” என்பதை வலியுறுத்தும், "தூஉய்மை யென்ப தவாவின்மை; மற்றது - வாஅய்மை வேண்ட வரும்" என்றதனால்.]

இது, தாம் இடருற்றுழித் தமக்கு உதவி செய்தாரது நட்பையும் குற்றமற்றாரது நட்பையும் விடற்க என்றது. ௧0௧.

ன்றி மறப்பது நன்றன்று; நன்றல்ல
தன்றே மறப்பது நன்று.

௩௮