பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈகையுடைமை

ன்னா திரக்கப் படுதல், இரந்தவர்
இன்முகம் காணும் அளவு.

இ-ள்:- இரக்கப்படுதல் இன்னாது-(பிறனொருவனால்) இரக்கப்படுதலும் இன்னாது; (எவ்வளவுமெனில்), இரந்தவன் இன்முகம் காணும் அளவு-இரந்துவந்தவன் (தான் வேண்டியது பெற்றதனானே காட்டும்) இனிதான முகங் காணும் அளவும் (என்க).

இது, கொடுக்குங்கால் தாழாது கொடுக்கவேண்டு மென்றது. ௨௨௪.

சாதலின் இன்னாத தில்லை; இனிததூஉம்
ஈதல் இசையாக் கடை..

இ-ள்:- சாதலின் இன்னாதது இல்லை-சாதலின் மிக்க துன்பம் தருவது இல்லை; ஈதல் இசையாக்கடை அதூஉம் இனிது-(இரந்து வந்தார்க்குக்) கொடுத்தல் முடியாதவிடத்து அதுவும் இனிதாம்.

இஃது, ஈயாது வாழ்தலிற் சாதல் நன் றென்றது. ௨௨௫.

த்துவக்கும் இன்பம் அறியார்கொல், தாமுடைமை
வைத்திழக்கும் வன்கண் ணவர்.

இ-ள்:- தாம் உடைமை வைத்து இழக்கும் வன்கண்ணவர்-தாம் உடைய பொருளைக் கொடாதே வைத்து (ப்பின்) இழக்கின்ற வன்கண்ணார், ஈந்து உவக்கும் இன்பம் அறியார்கொல்-(கொடுத்த) கொடையினால் (பெற்றவர்) முகமலர்ச்சி கண்டறியாரோ?

[ஈந்து என்பது வலித்து நின்றது. கொல் என்பது ஈண்டு ஐயப்பொருளைத் தந்து நின்றது.]

இது, பிறர்க்கு இடாதார் தம் பொருளை இழப்ப ரென்றது. ௨௨௬.

ரத்தலின் இன்னாத மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்.

௮௧

11