பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32. பிரார்த்தனைப் பத்து அருள்.ஆர் அமுதப் பெரும்கடல்வாய் அடியார் எல்லாம் புக்கு.அழுந்த இருள்.ஆர் ஆக்கை இது பொறுத்தே எய்த்தேன் கண்டாய் எம்மானே மருள்.ஆர் மனத்துஓர் உன்மத்தன் வருமால் என்று இங்கு எனைக்கண்டார் வெருளா வண்ணம் மெய்அன்பை உடையாய் பெறநான் வேண்டுமே (3) வேண்டும் வேண்டும் மெய்அடியார் உள்ளே விரும்பி எனை அருளால் ஆண்டாய் அடியேன் இடர்களைந்த அமுதே அருமா மணிமுத்தே தூண்டா விளக்கின் சுடர் அனையாய் தொண்ட னேற்கும் உண்டாம்கொல் வேண்டாது ஒன்றும் வேண்டாது மிக்க அன்பே மேவுதலே (4) மேவும் உன்தன் அடியாருள் விரும்பி யானும் மெய்ம்மையே காவி சேரும் கயல்கண்ணாள் பங்கா உன்தன் கருணையினால் பாவி யேற்கும் உண்டாமோ பரமஆனந்தப் பழங்கடல் சேர்ந்து ஆவி யாக்கை யான்எனதுஎன்று யாதும் இன்றி அறுதலே - (5) 666