பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32. பிரார்த்தனைப் பத்து அறவே பெற்றார் நின்அன்பர் அந்தம் இன்றி அகம்நெகவும் புறமே கிடந்து புலை நாயேன் புலம்பு கின்றேன் உடையானே பெறவே வேண்டும் மெய்அன்பு பேரா ஒழியாப் பிரிவுஇல்லா மறவா நினையா அளவுஇலா மாளா இன்ப மாகடல்ே (6) கடலே அனைய ஆனந்தம் கண்டார் எல்லாம் கவர்ந்துஉண்ண இடரே பெருக்கி ஏசற்று இங்கு இருத்தல் அழகோ அடிநாயேன் உடையாய் நீயே அருளுதி.என்று உணர்த்தாது ஒழிந்தே கழிந்தொழிந்தேன் சுடர்.ஆர் அருளால் இருள்நீங்கச் சோதீ இனித்தான் துணியாயே (7) துணியா உருகா அருள்பெருகத் தோன்றும் தொண்டர் இடைப்புகுந்து திணிஆர் மூங்கில் சிந்தையேன் சிவனே நின்று தேய்கின்றேன் அணிஆர் அடியார் உனக்குஉள்ள அன்பும் தாராய் அருள் அளியத் தணியாது ஒல்லை வந்தருளித் தளிர்பொன் பாதம் தாராயே (8) 668