பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41. அற்புதப் பத்து வணங்கும் இப்பிறப்பு இறப்புஇவை நினையாது மங்கையர் தம்மோடும் பிணைந்து வாய்இதழ்ப் பெருவெள்ளத்து அழுந்திநான் பித்தனாய்த் திரிவேனைக் குணங்களும் குறிகளும் இலாக் குணக்கடல் கோமளத் தொடும்கூடி - அணைந்து வந்துளனை ஆண்டுகொண்டு அருளிய அற்புதம் அறியேனே இப்பி றப்பினில் இணைமலர் கொய்துநான் இயல்பொடு அஞ்சு எழுத்து ஒதித் தப்பு இலாதுபொன் கழல்களுக்கு இடாதுநான் தடமுலை யார்தங்கள் மைப்பு உலாம்கண்ணால் ஏறுண்டு கிடப்பேனை மலர் அடி இணை காட்டி அப்பன் என்னைவந்து ஆண்டுகொண்டு அருளிய அற்புதம் அறியேனே ஊசல் ஆட்டும்.இவ் உடல்உயிர் ஆயின இருவினை அறுத்துஎன்னை ஒசை யால்உணர் வார்க்குஉணர்வு அரியவன் உணர்வுதந்து ஒளிஆக்கிப் பாசம் ஆனவை பற்றுஅறுத்து உயர்ந்ததன் பரம்பெருங் கருணையால் ஆசை தீர்த்து அடியார் அடிக் கூட்டியே அற்புதம் அறியேனே 7ՅԱ (6) (7) (8)