பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/495

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49. திருப்படையாட்சி சொல்இய லாதுஎழுதுமணி ஒசை சுவைதரும் ஆகாதே துண்என என்உளம் மன்னிய சோதி தொடர்ந்துஎழும் ஆகாதே பல்இயல்பு ஆய பரப்புஅற வந்த பராபரம் ஆகாதே பண்டுஅறி யாத பரானு பவங்கள் பரந்துஎழும் ஆகாதே வில்இயல் நல்நுத லார்மயல் இன்று விளைந்திடும் ஆகாதே விண்ண வரும்அறி யாத விழுப் பொருள் இப்பொருள் ஆகாதே எல்லை இலாதன எண்குணம் ஆனவை எய்திடும் ஆகாதே இந்து சிகாமணி எங்களை ஆள எழுந்தரு ளப்பெறிலே B40 (7)