பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2



கிடைத்த இன்ப அனுபவம் தம்மைவிட்டு நீங்கிப் போனதற்கு இந்தப் பூதவுடலே காரணம் என்ற எண்ணம் வலுவாக அடிகளாரைப் பற்றியிருத்தது போலும்.

இப்பாடலின் முதலடியில் வரும் 'கண்டுகொண்டு அருளு போற்றி' என்ற தொடர் உலகியலில் அன்றும் இன்றும் வழங்கிவரும் ஒரு தொடராகும். கண்டு கொள்வாயாக என்ற தொடர், 'என் குறை தீர்ப்பாயாக' என்ற பொருளைத் தருவதாகும்.

‘விட உள்ளே உருக்கி' என்ற சொற்கள் இரண்டு தனிப்பட்ட பொருளைத் தருவன. உள்ளே உருகுமாறு செய்தல் வேண்டும் என்பது ஒரு பொருள். அவ்வாறு உருக்கம் நிகழ்ந்தால் உலகியற் பந்தம் விடுபடும். அதாவது உலக பந்தம் விடும்படியாக என் உள்ளத்தை உருக்கி ஆண்டுகொள்வாயாக என்பது மறுபொருள் ஆகும்.

69. சங்கரா போற்றி மற்று ஓர்

சரண் இலேன் போற்றி கோலப்
பொங்கு அரா அல்குல் செவ்வாய்
வெள் நகைக் கரிய வாள் கண்
மங்கை ஓர் பங்க போற்றி
மால் விடை ஊர்தி போற்றி
இங்கு இவ் வாழ்வு ஆற்றகில்லேன்
எம்பிரான் இழித்திட்டேனே
65

சரண்-பாதுகாப்பு. கோலம்-அழகு. பொங்கு அரா-சினத்தாற் சீறியெழும் பாம்பு.

இப்பாடலிலும் தமக்கு வேறு சரணில்லை என்றும் இவ்வுலகவாழ்வை வெறுத்துவிட்டதாகவும் (இழித்திட்டேன்) கூறுகிறார்.

70.இழித்தனன் என்னை யானே

எம்பிரான் போற்றி போற்றி