பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


நாய்கள் என்று பன்மையால் கூறினும், நாய் என்று ஒருமையால் கூறினும், நாய்க்கும் பொய்க்கும் எவ்விதத் தொடர்புமில்லை. நாயின் வாழ்க்கையில் பொய்க்கு வாய்ப்பே இல்லை. தம்மை நாயாக உருவகித்துக் கொண்ட பின்னருங்கூட, தாம் பொய்யர் என்ற எண்ணம் அடிகளாரைவிட்டு நீங்கவில்லை. எனவே தான், தம்மை ஆட்கொள்ள வந்த இறைவன், தாம் பொய்யர் என்ற காரணத்தால் விட்டுவிடக் கூடாது, ஏற்றுக்கொண்டே தீரவேண்டும் என்று விண்ணப்பிக்கிறார்.

111.

 
பொய்யவனேனைப் பொருள் என ஆண்டு
      ஒன்று பொத்திக்கொண்ட
மெய்யவனே விட்டிடுதி கண்டாய்
     விடம் உண் மிடற்று
மையவனே மன்னும் உத்தரகோச
     மங்கைக்கு அரசே
செய்யவனே சிவனே சிறியேன்
     பவம் தீர்ப்பவனே 7

பொத்திக்கொண்ட- மறைத்துக்கொண்ட ஒன்று-முத்தி. பவம் -பிறவி.

‘யான் பொய்யன் என்பது அறிந்திருந்தும் என்னை ஆண்டுகொண்டாய். என்னைக் கைவிட்டுவிட வேண்டா’ என்று விண்ணப்பிக்கின்றார்.

சென்ற பாடலிலும், இந்தப் பாடலிலும் அவர் உள்ளத்தைக் குடைந்துகொண்டிருந்த 'தாம் பொய்யன்’ என்ற கருத்து ஊசலாடுவதைக் காணலாம்.

112.

தீர்க்கின்ற ஆறு என் பிழையை நின் சீர் அருள்
           என் கொல் என்று