176 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2
அடிகளாரைப் பொறுத்தமட்டில் இறைவனின் திருவடி, தனிமையைப் போக்கும் துணையாகவும், அவரது பகைகளை வெல்ல உதவும் உறுதுணையாகவும் இருந்தமையின் தனி நீக்கும் தனித் துணையே என்றார்.
143.
தனித் துணை நீ நிற்க யான் தருக்கித்
தலையால் நடந்த
வினைத் துணையேனை விடுதி கண்டாய்
வினையேனுடைய
மனத் துணையே என்தன் வாழ்முதலே
எனக்கு எய்ப்பில் வைப்பே
தினைத்துணையேனும் பொறேன்
துயர் ஆக்கையின் திண் வலையே 39
தருக்கிசெருக்குற்று. வினைத்துணையேன்-வினையைத் துணையாகக்கொண்ட யான்.
இப்பாடலின் முதலடிக்கு வாலாயமாகக் கூறும் பொருளை விட்டுவிட்டு வேறுவகையில் சிந்திக்கலாமோ என்று தோன்றுகிறது. ஆன்மாக்களுக்கு என்றுமே இறைவன் துணையாக உள்ளான் என்பது பொதுவாகப் பலரும் அறிந்த ஒன்றாகும். தோன்றாத் துணையாக உள்ள அந்த இறைவன் திருப்பெருந்துறையில் தோன்றும் துணையாக வந்து தோன்றினான்.
குருவாக நின்றவர் 'கோலம் ஆர்தரு பொதுவினில் வருக' என்று ஆணையிட்டு மறைந்தார். மறைந்தவர் எங்கே சென்றார்? புறத்தே காட்சி தந்த குரு மறைந்து, அடிகளாரின் அகத்தே தோன்றினார். தோன்றியவர், அடிகளாரின் உடல், பொருள், ஆவி அனைத்தையும் ஏற்றுக்கொண்டு தம் ஆணையின்படி நடக்குமாறு செய்தார்.